Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடந்தை எம்.எல்.ஏ., வீடிழந்தோருக்கு உதவி

பிப்ரவரி 14, 2020 08:56

கும்பகோணம்: கும்பகோணம் அருகே தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் லாரி அடியில் படுத்து உறங்கியவர் மீது லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

கும்பகோணம் அருகே நாதன் கோவில் காலனி தெருவைச் சேர்ந்தவர் அப்பாதுரை மகன் ஆனந்தன் வயது 50. இவர் சாக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு வாணிப கழகம் கொள்முதல் நிலையத்தில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் டாரஸ் லாரி அருகே படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இதையறியாத லாரியை டிரைவர் எடுத்த போது தூங்கிக்கொண்டிருந்த ஆனந்தன் மீது நிலைதடுமாறி அவர் மீது ஏற்றினார். அப்போது  படுகாயமடைந்த ஆனந்தன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
----------------
 

தலைப்புச்செய்திகள்